உங்களை அன்புடன் வரவேற்கிறது - விழுப்புரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் !!எழுச்சித்தமிழரின் சொல்லையும் செயலையும் எண்ணத்தையும் முன்னின்று வண்ணமாக்கி கொண்டிருக்கும் முண்ணணிச் சிறுத்தைகளுக்கு எங்கள் வணக்கம்..! மக்கள் வெள்ளம் பரவியது.. மாநகரம் குலுங்கியது மாநாடு சிறந்தது மண்புள்ளவர்கள் போற்றினார்கள் தூற்றியவர்கள் துயிலிழந்து போனார்கள்.., வளவனின் மாநாடு வரலாறானது... ஈழம் என்றால் என்ன..? இறையாண்மை என்றால் என்ன..? ஈடுகட்டினான் நம் தலைவன் எடுத்துவைத்தான் வரலாற்றை உண்மையை உணர்த்தினான் உலகிற்கு... புறம் சொல்லி புலம்பியவர்கள் புறமுதுகு காட்டி ஒடினார்கள் கயவர்கள்... ஈட்டிமுனை பார்வைக்கும் சாட்டையடி பதிலுக்கும்... வீறுகொண்டு எழுவோம்... சிறுத்தையாய் சீறுவோம்... வெற்றிக்கு பாடுபடுவோம் அங்கிகாரம் அடைந்திடுவோம் சாதியத்தை வேரறுப்போம் தமிழீழத்தை வென்றெடுப்போம் சமத்துவம் அடைந்திடுவோம்... ”திரு.மாவளவனின்” வழிநடப்போம் தமிழனின் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றுவோம் 2011 ஆண்டே வருக..! வருக..!! விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டே வருக..! வருக...!!! சிறுத்தைகள் ஆண்டு வாழ்த்துக்களை...பகிர்ந்து கொள்ளும், பலகோடி தொண்டர்களில் கடை கோடி தொண்டன் நான்...... பொறியாளர்.க.கோவிந்தராசன்.!!

வி.சி.கட்சி


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

அண்ணல் புரட்சியாளர் பாபா.சாகிப்.அம்பேத்கார் அவர்களின் மறைவுக்கு பின், உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வரலாறு 1982 ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் துணைவியார் சவீத்தா அம்மையார் அவர்களின் தலைமையில் தொடங்கிய பாரதிய தலீத் பாந்தர் இயக்கத்தை விதையாய் கொண்டது.அவ்விழாவில் அவ்வியக்கத்தின் இந்திய பொதுச்செயலாளர் திரு.இராம்தாசு அத்வாலே கலந்துக் கொண்டார்.வ்வியக்கத்தின் தமிழ்நாடு மாநில அமைப்பாளராக வழக்குரைஞர் .மலைச்சாமி அவர்கள் செயல்பட்டு வந்தார்.திடிரென்று 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அமைப்பாளர் திரு..மலைச்சாமி அவர்கள் காலமாகிவிட்டார். அவருடைய மறைவையயாட்டி முன்னணி தோழர்கள் சிலரைக் கொண்டு 1989-ம் ஆண்டு திசம்பரின் இறுதியில் வீரவணக்க அஞ்சலி ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிய தலீத் பாந்தர் இயக்கத்தின் முன்னணி தோழர்கள் நம் எழுச்சி தமிழர் அவர்களை வ்வியக்கத்தை தலைமை ஏற்று நடத்தும்படிகேட்டுக் கொண்டார்கள். அவ்வேண்டுகோளை முதலில் ஏற்க தயங்கினாலும் பின்னர் 1990 சனவரி 21 அன்று கூடிய பாரதிய தலீத் பாந்தர் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன் வந்தார்.அவ்வியக்கத்தின் அமைப்பாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நம் எழுச்சி தமிழர் பாரதிய தலீத் பாந்தர் இயக்கம் என்று அழைக்கப்பட்டு வந்ததை மாற்றி இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்று அழைத்தார். 1990-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் இயக்த்தின் முதல் கொடியை மதுரை கோ.புதூர் பேருந்து நிலையம் அருகில் ஏற்றி வைத்தார். இன்று எமது இயக்கக் கொடி நாளை நமது தேசியக் கொடி. என்ற முழக்கத்தோடு இயக்கக் கொடியை அறிமுகம் செய்தார்.பின்னர் 1991-ம் ஆண்டு முதல் இந்திய ஓடுக்கப்பட்டோர் சிறுத்தைகள் என்னும் பெயரை விடுதலைச் சிறுத்தைகள் என்று மாற்றி அறிவித்தார். சாதிய வன்கொடுமைகளை எதிர்ப்பதிலும் தமிழ் தேசிய உணர்வுகளை வளர்த்தெடுப்பதிலும் தீவிர முனைப்பு காட்டிய விடுதலைச்சிறுத்தைகள் தேர்தல் புறக்கணிப்பிலும் மிகுந்த தீவிரம் காட்டி வந்தது.காலப்போக்கில் மக்களின் கட்டளையை ஏற்று 1999 முதல் தேர்தல் அரசியலில் ஈடுப்பட்டு வருகிறது. மறைந்த திரு.மூப்பனார் அவர்களின் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசுடன் நாடாளுமன்ற தேர்தலின்போது, மூன்றாவது அணியில் விடுதைச்சிறுத்தைகள் இடம் பெற்றது. சிதம்பரம், பெரம்பலூரில் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது. சிதம்பரத்தில் 2.25 இலட்சம் வாக்குகçயும் பெரம்பலூரில் சுமார் 1 இலட்சம் வாக்குகளையும் பெற்று விடுதலைச்சிறுத்தைகள் ஒரு அரசியல் சக்தி என்று பதிவு செய்தது. 2001 ஆண்டு சட்ட பேரவை தேர்தலின் போது தி.மு.. கூட்டணியில் இடம் பெற்றது. தமிழகத்தில் 8 தொகுதியிலும் புதுச்சேரியில் 2 தொகுதியிலும் போடடியிடும் வாய்ப்பைப் பெற்றது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள மங்களூரில் போட்டியிட்ட திருமாவளவன் மடடுமே வெற்றிப்பெற்றார். போட்டியிட்ட மற்ற அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குளைப் பெற்று விடுதலைச் சிறுத்தைகள் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியயன்பதை மீண்டும் நிலை நாட்டியுள்ளது. 2004-ம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற பொதுதேர்தலின் போது விடுதலைச் சிறுத்தைகள் மேற்கொண்ட முன்முயற்சியில் மக்கள் கூட்டணி என்ற மூன்றாவது அணி உருவாக்கப்பட்டது. அப்போது விடுதலைச் சிறுத்தைகள் தமிழகத்தில் 8 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் போட்டியிட்டன.சிதம்பரம் தொகுதியில் சுமார் 2 இலட்சத்து 57 ஆயிரம் வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் புறக்கணிக்க முடியாத சக்தியாக விடுதலைச்சிறுத்தைகள் தலை நிமிர்ந்தது. இத்தகைய சூழலில் சட்டப்பேரவைக்கான பொதுதேர்தல் 2006-ம் ஆண்டு மே திங்களில் நடைப்பெற்றது. அத்தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் .தி.மு. தலைமையிலான மக்கள் சனநாயக கூட்டணியில் இடம் பெற்று தமிழகத்தில் 9 இடங்களிலும் புதுச்சேரியில் 2 இடங்களிலும் போட்டியிட்டது. அவற்றில் மங்களூர் மற்றும் காட்டுமன்னார்குடியில் வெற்றிப்பெற்றது. மங்களூரில் கு.செல்வப்பெருந்தகை அவர்களும் காட்டுமன்னார்குடியில் து.இரவிக்குமார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களாக பேரவையில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் 2006-ம் ஆண்டு அக்டோபர் திங்களில் தமிழக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் நடைப்பெற்றது. இத்தேர்தலில் வேட்புமனு தாக்குதலுக்கான கடைசி நேரம் முடிந்த நிலையில் .தி.மு.. செய்த திரை மறைவு வேலைகளை முறியடிக்கும் வகையில் கடைசி நேரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தி.மு.. கூட்டணியில் இணைந்தது. போட்டியிட் மிகக் குறைவான இடங்களிலும் கணிசமான இடங்களில் வெற்றிப்பெற்றது. கடைசி மனிதனுக்கும் சனநாயகம் எளிய மக்களுக்கும் அதிகாரம் என்ற அடிப்படையில் சனநாயகத்தையும் அதிகாரத்தையும் அடித்தட்டு வரையில் பரவலாக்கும் முயற்சியில் விடுதலைச் சிறுத்தைகள் படிப்படியாய் முன்னேறி வருகிறது. சாதி ஒழிப்பையும், தமிழ் தேசியத்தையும் அடிப்படைக் கொள்கைகளாக முன்னெடுத்து செல்வதில், அகில இந்திய அளவிலேயே விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மட்டுமே முதன்மையான கட்சியாக ,உலக தமிழர் அனைவருக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் செயலாற்றி வருகிறது.
அமைப்பால் மட்டுமே அத்துமீற முடியும் !
அத்துமீறலால் மட்டுமே அடிமைத்தனத்தை உடைத்தெறிய முடியும் !

அமைப்பாய் திரளுவோம் !
அங்கீகாரம் பெறுவோம் !
அதிகாரம் வெல்வோம்!
அண்ணலே இனியும் நாங்கள் ஆடுகளல்ல
இளிச்சவாயர் கூட்டமும் அல்ல
சீறிப் பாயும் விடுதலைச் சிறுத்தைகள்

அடங்க மறு ! அத்து மீறு ! திமிறி எழு ! திருப்பி அடி

உன்னைப் படி ! தாய் மண்ணைப் பிடி

திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது
திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !

படையை பெறுக்கு ! தடையை நொறுக்கு !

அடக்க நினைத்திடும் சிறைச்சாலை 
அது அரசியல் கற்பிக்கும் பாடச்சாலை

தலை நிமிர சேரி திரளும் ! அன்று தலை கீழாய் நாடு புரளும்

சேரியில் புரட்சியின் சினை வெடிக்கும் ஆதிக்க வெறி 
சாதியத்தின் தலை நறுக்கி பகை முடிக்கும் !

படை நடுங்கிட சீறி எழும்பு - நாளை 
பழி தீர்த்திடும் உன் வீரத்தழும்பு

நெருக்கடிகள் சூழ்ந்த போதிலும் கொள்கை நெறிப்படி வாழ்தல் வீரம்
நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறிமீறி பாய்தல் வீரம்

பாதையில் குறுக்கிடும் தடை மீறு
அதிரடி பாய்ச்சலில் படைத்திடு வரலாறு

கேட்பது பிச்சை ! மீட்பது உரிமை

எம் பதிவுகள் வெறும் கண்ணீர் துளிகளல்ல 
கலகத்தின் சினைகள்

அச்சம் தவிர்த்து சினந்து கிளம்பு - சாதியின் 
உச்சந்தலையில் இடியாய் இறங்கு

சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும் ! வரலாறு மாறும்
ஒப்பாரி ஒலங்கள் சேரிக்கு மட்டுமே சொந்தமில்லை

பொய் வழக்கும் கொடுஞ்சிறையும் போராளிகளை என்னச் செய்யும்.
கடைசி மனிதனுக்கும் சனநாயகம்
எளியமக்களுக்கும் அதிகாரம் !

ஒரு நாள் நிச்சயம் விடியும் - அது 
உன்னால் மட்டுமே முடியும்

எத்தனைக் காலந்தான் பொறுத்திறுப்பாய் - அட 
எழுந்திட வேண்டாமோ எரிநெருப்பாய்

மக்கள் விடுதலை மண்டியிட்டுப் பெறுவதல்ல
மடுவை மலையாக்கு ! மண்ணைச் சிவப்பாக்கு 
என்ற முழக்கங்களின் தத்துவத்தோடு
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முன்நிற்கிறது.
சின்னம்
http://www.vck.in/vck/images/design%20images/logo.jpg
சீறும் சிறுத்தையை மையமாகக்கொண்டு, அதைச் சுற்றிலும் மேல்பாகத்தில்சாதி ஒழிப்பே மக்கள் விடுதலைஎன்றும், கீழ்ப்பாகத்தில்விடுதலைச் சிறுத்தைகள்என்றும் கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.
கொடி
 http://www.vck.in/vck/images/design%20images/Flag.jpg

கட்சியின் கொடி நீலமும் சிவப்பும் கலந்த இருவண்ணங்களைக் கொண்டதாகும். கொடியின் மேல் பகுதியில் வானத்தின் நீல வண்ணமும், கீழ்ப்பகுதியில் குருதியின் சிவப்பு வண்ணமும், சம அளவுகளில் இருக்கும். கொடியின் மையத்தில் ஐந்து முனைகளையுடைய வெள்ளை விண்மீன் பொறிக்கப்பட்டிருக்கும். கொடி மூன்று பங்கு நீளமும் இரண்டு பங்கு அகலமும் கொண்ட அளவுகளில் இருக்கும்.
கொடி விளக்கம்:
நீல வண்ணம் - உழைக்கும் மக்களின் விடுதலையைக் குறிக்கும்
சிவப்பு வண்ணம் - புரட்சிகர நடவடிக்கைகளைக் குறிக்கும் 
விண்மீன் - விடியலை அடையாளப்படுத்தும் விடிவெள்ளியைக் குறிக்கும்.
விண்மீனின் ஐந்து முனைகள் - இயக்கத்தின் இலக்கை அடைவதற்கு கீழ்வரும் ஐவகை நோக்கங்களின் அடிப்டையில், கட்டமைக்கப்படும் போராட்டக் களங்களைக் குறிக்கும்.
1.
சாதி, மதம் ஒழித்து சமத்துவம் படைப்போம்.
2.
வர்க்க அமைப்பை உடைத்து வறுமையைத் துடைப்போம்.
3.
மகளிர் விடுதலை வென்று மாண்பினைக் காப்போம்.
4.
தேசிய இன உரிமைகள் மீட்டு, ஐக்கியக் குடியரசு அமைப்போம்.
5.
வல்லரசிய ஆதிக்கம் ஒழித்து வாழ்வுரிமைகள் மீட்போம்


Read more...

  © விடுதலைச் சிறுத்தைகள் கட்சி/ விழுப்புரம் மாவட்டம்/ தொடர்புக்கு:Email: thirumavpm@gmail.com/9445512506

Back to TOP